tamilnadu

img

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 30 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு காரண மாக 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து என்றால் அரசு போக்குவரத்து என்ற கருத்து உள்ளது. தனியார் பயன்பாட்டு வாக னங்கள் தவிர பொது பயன்பாட்டிற்கு பயன்படும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தான். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் அனைத்தும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் தான்.  தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து தவிர பொதுப்போக்குவரத்தில் 12 லட்சத்தி 30 ஆயிரம் வாகனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இத்தொழிலில் உள்ள 30 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

பயணிகள் பேருந்து 

அரசு பேருந்துகள் தவிர 6 ஆயிரம் தனியார் பேருந்துகள் தமிழகத்தில் இயங்கிக்கொண்டி ருக்கின்றன. இவற்றில் பணிபுரியும் 15 ஆயிரம் ஊழியர்கள் எவ்வித வேலையுமின்றி உள்ளனர். பொதுவாக தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிரந்தரமற்ற அத்துக்கூலி தொழிலாளர்களே. இவர்களுக்கு வேலை பார்க்கும் காலத்திலேயே வாகனங்களின் வசூ லுக்கு ஏற்ப வழங்கப்படும் பேட்டா தான் சம்பளம்.  வாகனங்கள் இயங்காத நிலையில் உரிமையா ளர்களும் எவ்வித ஊதியமும் வழங்கவில்லை. 

டாக்சி/கால் டாக்சி

சுமார் 50ஆயிரம் கால் டாக்சி மற்றும் டாக்சி கள் இயங்கிவருகின்றன. பொதுப்போக்குவரத்து தற்போது மீண்டும் துவங்கப்பட்டாலும் பயணிகள் வருவதில்லை. பெரு நகரங்களில் தனியாக டாக்சி நிறுத்த எவ்வித இடமும் உள்ளாட்சி நிர்வாகங்க ளால் ஒதுக்கி தரப்படாத நிலையில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போதே பயணிகள் ஏற வேண்டும் என்றால் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களோடு இணைந்து தான் இவர்கள் தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 100  ரூபாய்க்கு ஓட்டினால் இந்நிறுவனங்களின் கமிஷன், ஜிஎஸ்டி வரி தவிர்த்து 75 ரூபாய் தான் இவர்களுக்கு கிடைக்கும். இதை முறைப் படுத்த தொடர்ந்து போராடியும் அரசு முறைப் படுத்த தயாரில்லை. ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வாகனம் ஓடினால் கமிஷன், எரி பொருள், பராமரிப்பு, வண்டி வாடகை அல்லது தவணைக்கான பணம் போக இத்தொழிலாளர்க ளுக்கு ரூபாய் 500 வரை கிடைப்பதே அபூர்வம். இப்படிப்பட்ட நிலையில் இப்போது வாகனங்கள் ஓடத்துவங்கிய பின்பு 500 ரூபாய்க்கு கூட ஓடாத நிலையே உள்ளது. 

சுற்றுலா வாகனங்கள்

 தமிழகத்தில் சுற்றுலா வாகனங்கள் 1.5 லட்சம் அளவில் உள்ளன. கோவில், சுற்றுலா செல்வது, திருமணங்களுக்குச் செல்வது போன்றவை தான் இத்தொழிலாளர்களுடைய முக்கியமான வருமானம் ஆகும். இதுவரை இவ்வாகனங்க ளை இயக்க அரசு அனுமதிக்கவில்லை. 2 லட்சத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். 

சிறிய சரக்கு வாகனங்கள் 

2.5 லட்சம் சிறிய சரக்கு வாகனங்கள் முக்கிய கடைவீதிகள் மற்றும் நகர மையங்களில் இயங்கிவந்தன.  வர்த்தகம் மற்றும் இதர பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் பணிபுரியும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

சரக்கு லாரி 

தமிழகத்தில் 3.5 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. இவையும் முற்றிலும் முடங்கி யுள்ளன. இவற்றில் வெளிமாநிலங்களுக்கு செல்லும் 1 லட்சம் நேசனல் பெர்மிட் லாரிகளும் அடங்கும். 

ஆட்டோக்கள்

தமிழகம் முழுவதும் 2.75 லட்சம் ஆட்டோக் கள் இயங்கிவருகின்றன. நாளொன்றுக்கு ரூபாய் 1000 வருமானம் வந்தால் தான் எரி பொருள், வண்டி வாடகை, உணவுச் செலவு போக ரூபாய் 300 கூட கிடைப்பது கடினமாகும். நடை முறையில் வரும் இந்த வருவாய்க்கு மேல் பள்ளி குழந்தைகளை ஏற்றுவது போன்ற வற்றின் மூலம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் ரூபாய் 3000 - 4000 தான் வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியச் செலவுக்கு பயன்பட்டுவந்தது. பள்ளிகளும் இயங்காத நிலையில் இவ்வருமா னமும் இல்லை.  

ஒர்க் ஷாப்புகள் 

மேற்கண்ட வாகனங்களின் இயக்கத்தை ஒட்டித்தான் ஒர்க் ஷாப்புகள் செயல்படும். வாக னமே இயங்காத நிலையில் இதில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். 

பொதுவான நிலை 

பொதுவாக லாரி முதல் ஆட்டோ முடிய 90  சதவீதம் வாகனங்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுத்தான் இயங்கி வருகின்றன. அரசு நிதி நிறுவன கடனுக்கு செப்டம்பர் வரை விதிவிலக்கு அளித்துள்ளது. இருப்பினும் தனியார் நிதி நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற னர். மேலும் இந்த 6 மாத காலத்திற்கான வட்டியை கணக்கிட்டு அதையும் அசலுடன் சேர்த்து வசூலிக்க ஏற்பாடு செய்துவருகின்றன.

சாலை வரி 

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் சாலை வரி கட்டவேண்டும். சட்டப்படி ஒரு வாகனம் 10 நாட்களுக்கு மேல் நிறுத்தப் பட்டால், எத்தனை நாள் நிறுத்தப்பட்டதோ அத்தனை நாட்களுக்கு உரிய தொகை அடுத்து வரிகட்டும்போது சரி செய்யப்படும். ஆனால் வாகனங்களை அரசே நிறுத்திய இரண்டு மாதங்க ளுக்கும் வரியை இரத்து செய்ய கோரியும் அரசு மறுத்துவருகிறது.      

மத்திய அரசு 

மாநில அரசு வரியை இரத்து செய்ய மறுத்தால் மத்திய அரசு வாகனங்களுக்கு வயது நிர்ணயம் செய்து பழைய வாகனங்களுக்கு பதில் புதிய வாகனம் இயக்கவேண்டுமென கூறி அதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியா முழு வதும் வாகன பதிவு மற்றும் வாகன புதுப்பித்தலை வாகன உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்க மோட்டார் வாகன சட்டத்தில் விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவது தான். ஒட்டுமொத்தத்தில் பொதுப்போக்குவரத்தை அழித்து சிறு உடமையாளர்கள் மற்றும் இதில்  பணிபுரியும் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் கூலி அடிமையாக்கும் ஏற்பாடுதான். கொரோனா காலத்தில் பாதிக்கப் பட்டுள்ள 30 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவார ணம் கோரியும் சாலை வரி மோட்டார் வாகன சட்ட திருத்த ஏற்பாடுகளை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி வசூலை கைவிட வலியுறுத்தியும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனம், கால் டாக்சி சங்கங்க ளின் கூட்டமைப்பு, இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் கூட்டமைப்பு, அகில இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து 22.07.2020 அன்று வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர். 30 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார போராட்டத்தின் துவக்கம் இது. போ ராட்டம் தொடர்ந்தால் தான் எதிர்கால வாழ்வு.

கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம்